Monday, September 26, 2011

கண்ணீர் குழந்தை....!!!

  • நீ என்னை பார்த்தாய்....
    நான் உன்னை பார்த்தேன்...
    காதல் குழந்தையை
    பிரசவித்தது எம் நெஞ்சம்....
    இன்று
    நீ உதிர்த்த வார்த்தைகளால்- என்
    கண்கள் பிரசவித்தது
    எண்ணற்ற  கண்ணீர் குழந்தைகளை....
    சுகமாக எண்ணி வலிகளைத்தாங்கி.....!!!

poem: இன்றைய கண்ணகியாய் நீயிரு.....!

poem: இன்றைய கண்ணகியாய் நீயிரு.....!: பருவத்தின் இன்னல்கள் பகலவனின் சுடர்களிலும் சுட்டெரிக்கும் வாழ்கையினை தோழியே உன் காலடியில் காதலெனும் படுகுழிகள் பல தோன்றும் வ...

Sunday, September 25, 2011

இன்றைய கண்ணகியாய் நீயிரு.....!


பருவத்தின் இன்னல்கள்
பகலவனின் சுடர்களிலும்
சுட்டெரிக்கும் வாழ்கையினை
தோழியே உன் காலடியில் 
காதலெனும் படுகுழிகள் 
பல தோன்றும்
விழுந்திடதே......
நாளை உன் வாழ்வை
சீரழிக்க திட்டமிடும்
சூழ்ச்சிகள் பலவுண்டு
இப்பூமியில்....
கயவரின் கையில்
காதலெனும் ஆயுதம்....
உன் கண்ணிரெண்டில்
காவலெனும் கணை கொண்டு
காத்திடு உன் கற்பை
நாளை உலகம் உன்னை
பழிகூற வழியின்றி.....
இன்றைய கண்ணகியாய்
நீ இருந்து.......! 

Friday, September 16, 2011


கடற்கரை மணலில்
உன் பெயரை எழுதிடாதே
அதனை களவாட
பலகோடி அலைகள்
காத்திருக்கின்றன........!

Thursday, September 15, 2011

அன்பு..........!!


நிலவு தேய்ந்துவிடும்
மலர்கள் உதிர்ந்துவிடும்
வானவில் மறைந்துவிடும்
மழை ஓய்ந்துவிடும்
பூமி நின்றுவிடும்
ஆனாலும் ஓயாது
உன்மீது நான் கொண்ட
உண்மையன்பு........!

பெண்.......!



நிலவாக வதனம்-விண்
மீனாக கண்கள்
இதழான கொவ்வை
இதமான மென்மை
மல்லிகை மேனி
சிலையெனக்கொண்டு
வரைந்தான் பிரம்மன்
பெண்ணெனும் அழகை......!